தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டம் (மதுரை மண்டலம்) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

271views
“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” , “என் குப்பை எனது பொறுப்பு” என்ற புதிய திட்டத்தின்படி கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் கட்டிட இடிமான கழிவுகளை சாலைகளிலோ தெருக்களிலோ போடக்கூடாது.  அவ்வாறு போடுவது கட்டிட இடிமான கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அரசிதழ் அரசாணை (நிலை)  எண் 250 நாள் 24.06.2017 படி ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று   அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே கட்டிட இடிமான கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அகற்றி நகராட்சி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய உரக்கிடங்கு,  பள்ள மோர்க் குளம் என்ற இடத்தில் கொட்டிக் கொள்ளலாம். அல்லது ஒரு நடைக்கு உரிய நிர்வாக கட்டணம்  ரூபாய் 750  நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி நகராட்சி வாகனம்  மூலம் கட்டிட இடிமான கழிவுகளை அப்புறப்படுத்திக் கொள்ளலாம்.
 திரு ஹாஜா ராவுத்தர் துப்புரவு பணி மேற்பார்வையாளரை 9994046329 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என  கீழக்கரை நகராட்சி ஆணையாளர், மற்றும் கீழக்கரை நகர் மன்ற தலைவர் அறிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!