தமிழகம்

மதுரை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சரந்தாங்கி பள்ளிக்கு வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் கிராம மக்கள் பாராட்டி கேடயம் வழங்கினர்

45views
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சரந்தாங்கி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில்.சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அதிகமாக பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைத்தனர். இப்பள்ளி ஆசிரியர் பெருமக்களின் சீரிய முயற்சியால் மதுரை மாவட்டத்தில் 2021. 22 ஆம் கல்வி ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் பள்ளி பள்ளியின்தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா நடத்தினர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையேற்று அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார். மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு.கிராம மக்கள் பொன்னாடை அணிவித்தும் மாலை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்வி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!