தமிழகம்

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சிந்தாமணி பகுதியில் போலீசாரை டூவீலரில் வந்த வாலிபர்கள் இடையூறு செய்த வாகனங்கள் 3 பறிமுதல் மேலும் 12 வாகனங்களை போலீசார் தேடி வருகின்றனர்

92views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து சாலையில் குறுக்கே வட்டம் அடித்து கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் அவர்களை எச்சரித்தும் கேக்கமறுத்து தொடர்ந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் வகையில் சிந்தாமணி சாலையில் கெரோ செய்து வாகனத்தை ஓட்டினார் .
இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும் 12-க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!