தமிழகம்

தாயை இரு சக்கர வாகனத்தின் மூலம் ஆன்மீக யாத்திரை அழைத்து சென்று கொண்டிருக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணகுமார் சோமவார வழிபாட்டை ஒட்டி ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோயிலில் நடந்த சங்காபிஷேகத்தில் தாயுடன் வழிபாடு நடத்தினார்.

163views
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 45 வயதான இவரின் தந்தை காலமானார். இதனை அடுத்து இவரது தாய் ரத்னம்மாள் மிகவும் மனமுடைந்தார். தன்னுடைய வெறுமை குறித்து மகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணகுமாரிடம் தெரிவித்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த கிருஷ்ணகுமார், தாயின் மனக் கஷ்டத்தை போக்குவதற்காக, கடந்த 2018ம் ஆண்டு முதல் ரத்னம்மாளை இரு சக்கர வாகனத்தின் மூலம் ஆன்மீக யாத்திரை அழைத்து சென்று கொண்டிருக்கிறார். தற்போது வரை நாடு முழுவதும் சுமார் 56 ஆயிரம் கிமீ வரை பயணம் செய்து, திருப்பதி, காளஹஸ்தி, ஶ்ரீரங்கம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் தாயும் மகனும் தரிசனம் செய்துள்ளனர்.
அதன்படி ராஜபாளையம் வந்த இருவரும், தென்காசி சாலையில் உள்ள சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு நடந்த சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களை பற்றி அறிந்திருந்த பக்தர்கள் இவர்களிடம் நலம் விசாரித்தனர். இன்றைய வழிபாடை முடித்துக் கொண்ட பிறகு இருவரும் இரு சக்கர வாகனத்தின் மூலம் ராமேஸ்வரம் சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!