தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நியாய விலை கடையில் திருடிய பீகாரை சேர்ந்தவர்கள் உட்பட 14 பேர் கைது.

109views
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காரைக்குடி, சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் நியாய விலை கடைகளின் பூட்டை உடைத்து அரிசி பருப்பு போன்ற பொருட்கள் திருடப்பட்டு வந்தது.இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படையினர் நடத்திய தீவிர கண்காணிப்பின் அடிப்படையில், காஞ்சிவனம், வடிவேல், ப்ரியா, சிவா, கார்த்திகேயயன், சிரஞ்சீவி, கதிர்வேல், ரமேஷ், மற்றும் பீகாரை சேர்ந்த பர்வீன், ரவிக்குமார், சாகர் குமார், மனோஜ்குமார் உட்பட 14 பேரை கைது செய்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், காரைக்குடியை அடுத்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு , சீனி ஆகியவற்றை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 கார்கள்,நான்கு இரு சக்க வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!