69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022-ஐ முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக இன்றையதினம் இரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கூட்டுறவுத்துறையின் சார்பில் , நடைபெற்று வரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022-ஐ முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக இன்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கூட்டுறவுவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் , கூட்டுறவுத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள்.
தமிழக முழுவதும் கூட்டுறவுத்துறையின் சார்பில், தற்போது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022 சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 14.11.2022 அன்று கூட்டுறவு வார விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு, ஒருவார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதனடிப்படையில் முதல்நாள் (14.11.2022) நிகழ்வாக, பையூர் பிள்ளைவயல் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் புதூர் நாடக மேடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சியும், சிவகங்கை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மரம் நடும் விழாவும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, 15.11.2022 அன்று சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் உள்ள கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் மாணாக்கர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்றயைதினம் (16.11.2022) பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறையை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்ற இரத்ததான முகாம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. மேலும், சிவகங்கை ராஜ் மஹாலில் கூட்டுறவு சேவை குறித்து சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது.
(17.11.2022) அன்று இடையமேலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், கால்நடை மருத்துவ முகாமும் மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணாக்கர்களிடையே ஓவியப்போட்டிகளும் நடைபெறவுள்ளது. மேலும், 18.11.2022 அன்று காரைக்குடி தேவேந்திர குல வேளாளர் மஹாலில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொது மருத்துவ முகாமும்,
19.11.2022 அன்று இளையான்குடி கூட்டுறவு மற்றும் காரைக்குடி கூட்டுறவு நகர வங்கி உறுப்பினர்கள் சந்திப்பு முகாமும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் நிறைவாக, 20.11.2022 அன்று திருப்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில், கூட்டுறவு வார நிறைவு விழா நிகழ்ச்சியினை துறைரீதியாக நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றையதினம் நடைபெற்ற மருத்துவ முகாமில், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் கோ.ஜீனு, இணைப்பதிவாளர் ஃ மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், இணைப்பதிவாளர் ஃ பணியாளர் அலுவலர் நாகராஜன், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேலு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மரு.சர்மிளா திலகவதி, மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.இராமநாதன், உதவி நிலைய மருத்துவர் மரு.முகம்மதுரபி, அவசர சிகிச்சைப்பிரிவு பேராசிரியர் மரு.ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.