134views
ஐ.நா. பொது அவை, 1990ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் முதல் நாள் சிறப்பிக்கப்படவேண்டும் என்று அறிவித்தது
வயதுமுதிர்ந்தோராகிய நாம் பலநேரங்களில், பராமரிப்பு, பாசம் மற்றும் சிந்தனை ஆகியவற்றை அதிகம் சார்ந்து இருக்கிறோம், ஆயினும், நாம் கனிவன்பின் ஆசிரியர்களாக மாற முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட வயதுமுதிர்ந்தோர் உலக நாளையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, போருக்குப் பழக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், கனிவன்பின் ஓர் உண்மையான புதிய புரட்சி நமக்குத் தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
“மாறிவரும் உலகில் வயதுமுதிர்ந்தோரின் மீட்டெழுச்சி” என்ற தலைப்பில், வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ்
ஐ.நா. பொது அவை, 1990ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் முதல் நாள் சிறப்பிக்கப்படவேண்டும் என்று அறிவித்தது.