தமிழகம்

பட்டையை கிளப்பும் 14 வது வார்டு கவுன்சிலர் முகமது நசீர்

141views
திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சி 14 வது வார்டு கவுன்சிலராக திமுக வை சேர்ந்த முகமது நசீர் என்பவர் உள்ளார். இவர் தொடர்ந்து தமது பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி, தெருக்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது,தெரு விளக்கு பிரச்சினைகள், சாக்கடை பிரச்சினைகள், போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அம்மைய நாயக்கனூர் சுடுகாடு நீண்ட காலமாக புதர்கள் மண்டியும் சரி வர பராமரிப்பு இன்றியும் கிடந்தது. இறந்தவர்களின் உடல்களை அங்கு கொண்டு சென்று எரிப்பதற்கோ புதைப்பதற்கோ மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதை அறிந்த முகமது நசீர் அந்த சுடுகாட்டை சுத்தம் செய்து அதற்கான பாதைகளை சரி செய்து தந்துள்ளார்.
பொது மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வகையான பணிகளைச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் இவரது பணிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!