உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் சர்ச்லே உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது. லாரா ஷெப்பர்ட்டின் தந்தையான ஆலன் ஷெப்பர்ட் கடந்த 1961-ம் ஆண்டு மே 5-ந் தேதி புளோரிடா மாகாணத்தில் இருந்து மெர்குரி விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்து, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புளூ ஆரிஜின் நிறுவனத்துக்கு சொந்தமான வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ஆலன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேருடன் நியூ ஷெப்பர்ட் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. இந்த பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. நியூ ஷெப்பர்ட் விண்கலம் 100 கிலோமீட்டர் உயரம் வரை பயணித்தது. அதன் பின்னர் அந்த விண்கலம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.
121views
You Might Also Like
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல் கூஸ் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார்...
அமீரகத்திற்கான இந்திய தூதருடன் ஜூம் காணொளி வழியாக அய்மான் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
நாள் :02-03-2026. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த முக்கியமான கால சூழ்நிலையில் இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக இந்திய தூதரகத்துடன் இன்று 02-03-2026 காலை 11:00 மணியளவில் நடைபெற்ற...
மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவரகள் எழுதிய நூல்கள் திறனாய்வு அரங்கு
சங்கைக்குரிய ஷைகு நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் அலி மௌலானா அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, கத்தார் சார்பில் மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித்...




