இந்தியா

“விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்று புதிய விருது வழங்க ஏற்பாடு”. மத்திய அரசு திட்டம்

42views
பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தி இருக்கிறார் விருதுக்கு உரியவரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படத் தன்மை உருவாக்குவதன் மூலமாக விருது மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் பின்னணியில் எட்டு விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத் துறைகளில் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது தற்போது வழங்கப்பட்டு வரும் 300 க்கும் மேற்பட்ட விருதுகளை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டு இருக்கின்றார். அதிலும் குறிப்பாக தனி நன்கொடை விருதுகள் பெலோஷிப் மற்றும் உள் விருதுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் வருடம் தோறும் 51 நர்சுகளுக்கு பிரான்ஸ் நைட்டிங்கில் விருது வழங்கப்பட்டு வருகிறது அதன் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறும் அஜய் பல்லா வலியுறுத்தி இருக்கிறார். மேலும் தேசிய மருத்துவ கவுன்சில் வழங்கி வரும் பிசிராய் உள்ளிட்ட மூன்று விருதுகளை மறுசீரமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதிக மதிப்பு கொண்ட புதிய விருது ஒன்றை உருவாக்குமாறு தெரிவித்துள்ளார். அதேபோல தகுதி வாய்ந்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்று விஞ்ஞான ரத்னா எனும் புதிய விருதை உருவாக்கி வழங்குமாறும் இது தொடர்பாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் உடன் ஆலோசனை நடத்துமாறு அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார் மேலும் 37 விருதுகளை ரத்து செய்யுமாறும் சுகாதார ஆராய்ச்சி துறையை அஜய் பல்லா அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போதைய விருதுகளை ரத்து செய்துவிட்டு அதிக அந்தஸ்து கொண்ட புதிய விருதுகளை உருவாக்குமாறு புவியியல் அமைச்சகம், விண்வெளி துறை, அணுசக்தி துறை போன்றவற்றிற்கு யோசனை கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!