உலகம்உலகம்செய்திகள்

மீண்டும் ஒரு அபாயம். திடீரென ஏற்படும் பயங்கரம். பிரபல நாட்டில் எச்சரிக்கை..!!

68views

கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேஷியாவில் உள்ள மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அதேபோல் கடந்த ஜூன் 3-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அந்த பகுதிக்கு தற்போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே மாலுகு தீவுகள் பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!