சினிமா

போயஸ் கார்டனில் விரைவில் அடியெடுத்து வைக்கிறார் இன்னொரு விவிஐபி

60views

ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டு அரசியல் சென்னை போயஸ் கார்டனை சுற்றியே இருந்தது. அவர் இறந்த போதும் பேசுபொருளாக இருக்கிறது போயஸ் கார்டன்.

உச்ச அரசியல் நட்சத்திரம் மட்டும் வாழ்ந்த பகுதி மட்டுமல்ல, உச்ச சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்த் வாழும் பகுதியும் போயஸ் கார்டன் தான். இப்படி விவிஐபிக்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பகுதிக்குள் விரைவில் அடியெடுத்து வைக்கிறார் இன்னொரு விவிஐபி.

நயன்தாரா, ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னேறினார். கடந்த 5 வருடங்களாக அவர் தமிழ் படஉலகின் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். கோடிகளில் சம்பளம் வாங்கினார்.

சமீபத்தில் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு, அவரது காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடிய வீடியோக்கள் செம்ம வைரலாகி வந்தது. அதோடு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க உள்ள, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் புதிய படத்தை அவருடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனுபம்கெர், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மிகவும் வித்தியாசமாக ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு அறிவித்தது படக்குழு.

இந்நிலையில் நடிகை நயன்தாரா விவிஐபி ஏரியாவான சென்னை போயஸ் கார்டனில் 4 பெட்ரூம் கொண்ட இரண்டு அபார்ட்மெண்டுகளை  வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. பல கோடி மதிப்புள்ள இந்த வீட்டிற்கு நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் விரைவில் குடிபெயர உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில் தான் உள்ளது. அவரை தொடர்ந்து அவரது மருமகனும் நடிகருமான நடிகர் தனுஷும் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரம்மாண்டமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!