இந்தியா

பண மோசடி வழக்கு: நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை…!

59views

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.

இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

பின்னர் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அமலாக்கத்துறையின் அனுமதி இன்றி அலுவலக வளாகத்தை திறக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!