விளையாட்டு

சென்னையை வீழ்த்தியது பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

77views

ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 2-4 என்ற கணக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது.

கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. வாஸ்கோடா காமாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் சென்னை அணியின் மிர்லன் முர்சேவ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 38வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் கோவா அணியின் கிளீடன் சில்வா ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். தொடர்ந்து அசத்திய கோவா அணிக்கு 43வது நிமிடத்தில் ஆலன் கோஸ்டா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் சென்னை அணி 1-2 என, பின்தங்கி இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 49வது நிமிடத்தில் ரஹீம் அலி ஒரு கோல் அடித்து 2-2 என, சமநிலை பெறச் செய்தார். ஆனால் இது நிலைக்கவில்லை. பெங்களூரு அணியின் உதாண்டா சிங் (70வது நிமிடம்), பிரதிக் சவுத்தரி (74வது) தலா ஒரு கோல் அடித்து பதிலடி தந்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய சென்னை அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-4 என, தோல்வியடைந்தது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி, 9 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியது. மூன்றாவது தோல்வியை பெற்ற சென்னை அணி 11 புள்ளிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!