சினிமா

சூர்யா – சிவகார்த்திகேயன் காம்போ… எதற்கும் துணிந்தவன் 3வது பாடல் ரிலீஸ்

51views

சூர்யா, சிவகார்த்திகேயன் காம்போவில் முதல் பாடலாகவும், எதற்கும் துணிந்தவன் படத்தின் 3வது பாடலாகவும் சும்மா சுர்ருன்ன என்ற பாடல் இன்று ரிலீஸாகியுள்ளது.

நடிப்பில் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சில படங்களுக்கு பாடல்களையும் எழுதி வருகிறார். சமீபத்தில் டாக்டர் படத்தில் வெளியான டிக்டாக் பாடல், சிவகார்த்திகேயன் வரிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். இதனால் அந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், சினிமா ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக, சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் ஒரு பாடலை எழுதி அசத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இமான் இசையில், எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இதுவரை வாடா தம்பி, உள்ளம் உருகுதையா ஆகிய 2 பாடல்கள் வெளிவந்த நிலையில், 3வது பாடலாக சும்மா சுர்ருன்னு இன்று வெளியாகியுள்ளது.

பாடல் வெளியான சிறிது நேரத்திலிலேயே லைக்ஸ்களையும், பாசிடிவான கமென்டுகளையும் பாடல் குவித்து வருகிறது.

படத்தை பிப்ரவரி 4-ம்தேதி வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மும்முரம் காட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா குறைந்தால் மட்டுமே 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பதால், பிப்ரவரி 4-ம்தேதி படம் வெளியாகும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!