கொரோனா தொற்று எண்ணிக்கை மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு ஒரு நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிமானோர் அங்கு தினமும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அம்மாநில அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இந்நிலையில் மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது, ஊரடங்கால் நோய் தொற்று குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
276views
You Might Also Like
மதுவிலக்கு கொள்கையை கைவிட்ட மணிப்பூர் அரசு!
முனைவர் என்.பத்ரி மணிப்பூரில் கடந்த 30 ஆண்டுகாலமாக மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது.ஆனால் இந்தக் கொளகையை மணிப்பூர் அரசு தற்போது கைவிட்டு விட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது...
ஈச் பவுண்டேஷன் சார்பில் பாடகர் கிருஷ்ணாவுக்கு ‘கலா ஶ்ரீ’ விருது. புதுச்சேரி அரசின் துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
ஈச் பவுண்டேஷன் சார்பில், சேர்மன் தமிழ்வாணன் முன்னிலையில் 'வெள்ளந்தி' படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமான பாடகர் கிருஷ்ணா அவர்களின் இசை சேவையை...
திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு வண்ணமின் அலங்காரம்
திருப்பதி - திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவாரி கோயிலின் முகப்பு மற்றும் திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்து அசத்தல்
கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் நீர்முழ்கி கப்பலில் ஜனாதிபதி திரெளபதிமுர்மு பயணம் மேற்கொண்டார். முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அவருடன் கடற்படை...
திருமலை ஸ்ரீவாரியில் லட்டின் தரத்தை ஆய்வு செய்த தேவஸ்தான தலைவர்
திருப்பதி - திருமலையில் உள்ள ஸ்ரீவாரி லட்டு கவுண்டரில் தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு ஆய்வு மேற்கொண்டார். லட்டுகளின் தரம் குறித்து பல பக்தர்களிடம் ஆலோசனை கருத்தினை கேட்டறிந்தார்....




