செய்திகள்விளையாட்டு

உலககோப்பையில் அதிவேக சதமடித்த கிரிக்கெட் வீரரின் ஓய்வு அறிவிப்பு!

51views

அதிவேகமாக கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர் ஒருவர் தனது ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த அயர்லாந்து வீரர் கெவின் ஓபிரியன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கெவின் ஓபிரியன் அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் சோகம் ஆகி உள்ளனர்

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதமடித்தார் கெவின் ஓபிரியன் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் சம்பந்தமான பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களை அதிக அளவு கிரிக்கெட்டில் ஈடுபட்டு வைக்க தான் முயற்சி செய்ய இருப்பதாகவும் கெவின் ஓபிரியன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஓபிரியன் அவர்கலூக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!