சினிமா

இது என்னோட டைம் பாஸ்.. சம்பளத்தை ஏற்றி ஷங்கரயே தலை சுற்ற வைத்த SJ சூர்யா

68views

தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு பல படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்.

ஆனால் தற்போது இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெருமளவு ஈர்த்துள்ளது.

கடந்தாண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. சிம்புக்கு இப்படம் எப்படி கம்பேக் கொடுத்ததோ அதே போல் எஸ் ஜே சூர்யாவுக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு என்ற வசனம் ஹிட்டானது.

மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எஸ்ஜே சூர்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் RC15. ராம் சரணின் 15வது படமான RC15 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

RC15 படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கு 9 கோடி சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் 4 கோடி சம்பளம் பெற்ற நிலையில் அதைவிட இரண்டு மடங்கு மேலாக 9 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் பல தயாரிப்பாளர்கள் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து தன் படத்தில் எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஏனென்றால் மாநாடு படத்தால் எஸ் ஜே சூர்யாவின் மவுசு அதிகம் ஆகி உள்ளது. அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆகிவிடுகிறார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!