தமிழகம்

ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

138views

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.

இந்த பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!