தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

64views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொடிக்குளம் கிராமம். இக்கிராமத்தில் சின்னக்கண்மாய் பெரியகண்மாய் என இரு கண்மாய்கள் உள்ளன.இக்கண்மாய்களை ஏலம் விட இக்கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கண்மாய் ஏலம் விடுவது பலமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சின்னக்கண்மாய் ஏலம் விடப்பட்டதாகவும் பெரியகண்மாய்க்கு இன்று ஏலம் விட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு ஆத்திரமடைந்த கிராமமக்கள் கண்மாய் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கொடிக்குளம் உள்பட 5 கிராம மக்கள் ஏலம் நடைபெற இருக்கும் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் உள்ள நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது..சம்பவமறிந்த அதிகாரிகள் கிராமமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்றைய ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!