308views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபலமான தனியார் ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது. இந்த ஸ்கேன் சென்டரில், நவீன தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய ‘மார்பக ஊடு கதிர் கருவி (Digital Mammogram) கதிர் சோதனை வசதியை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிவகாசியின் பிரபல டாக்டர் ஞானகுருசாமி பேசும்போது, மாறி வரும் உலக சூழ்நிலையில் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்களை கண்டறிவதில் ஸ்கேனர் கருவிகளின் உதவி அளப்பறியது. பொதுவாக மார்பக சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஸ்கேன் செய்யும் வசதி தென் தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. தற்போது சிவகாசியில் மார்பக ஊடு கதிர் ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.






