விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜம்மாள். இவர் நேற்று இரவு சிவகாசி முருகன் கோவில் பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவகாசி – திருத்தங்கல் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் தகராறு செய்து கொண்டிருப்பதாக காவலர் ராஜம்மாளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்திற்கு ராஜம்மாள் விரைந்து சென்றார். அங்கு சாலையில் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விலக்க முயன்றார். அப்போது தகராறில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர், பெண் காவலர் ராஜம்மாளை பலமாக தாக்கினார். இது குறித்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலர் ராஜம்மாளை தாக்கிய வாலிபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், பெண் காவலரை தாக்கிய வாலிபர் பெயர் முத்துமணிகண்டன் என்றும், அவர் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதும் தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே அடிதடி வழக்குகள், கொலை மிரட்டல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பெண் காவலரை தாக்கிய வழக்கறிஞர் முத்துமணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தகராறை விலக்கச் சென்ற பெண் காவலர் ஒருவரை, வழக்கறிஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.