தமிழகம்

ராமநாதபுரத்தில் வரும் 26,27 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

161views
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குச் சாவடிகளிலும் நவ.26, 27 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 சதவீகித்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்று கருடா செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி நவ.9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்று வருகிறது. 2023 ஜன.1 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடம் வழங்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் கைபேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை டிச.8, 2022 மேற்கொள்ளலாம்.
வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குச் சாவடிகளிலும் நவ.12,13ல் சிறப்பு முகாம் நடந்தது. இதனை தொடர்ந்து நவ. 26, 27 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று, பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!