தமிழகம்

வேலூர் வெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில்+2 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரி

51views
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர மேல் நிலைப்பள்ளி வெளி அரங்கில்+2 பயிலும் அறிவியல் பாடப்பிரிவு மாணவ-மாணவியர்களுக்கு கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பாக பொது தேர்வுகளை எப்படி? எதிர்கொள்வது, அதிக மதிப்பெண்கள் எடுப்பது எப்படி? வேலைவாய்ப்பு தன்மைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.அகிலா கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அருகில் காட்பாடி வித்யாநிகேதன் பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுரேஷ்பாபு சத்துவாச்சாரி சாந்திநிகேதன் பள்ளி கணித ஆசிரியர் பிரபுஜார்ஜ், குடியாத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் பிரபு, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!