தமிழகம்

வேலூரில் தனியார் தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் தாளாளர்களின் ஆலோசனை கூட்டம்

51views
வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மெட்ரிக் பள்ளிகளின் வேலூர் மாவட்ட தலைவர் எஸ்.மஞ்சுநாத் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரிபள்ளிகளின் மாவட்ட தலைவர் டாக்டர் ஏ.எஸ்.இன்பராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் எம்.விஜயகுமார் வரவேற்றார். மாநில தலைவர் சி.எஸ்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் பி.சதீஷ், மாநில பொருளாளர் ஏ.ஆனந்தகுமார் ஆகியோர் பேசினார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டடன. தனியார் பள்ளிகளுக்கு தற்போது விதித்திருக்கும் டிடிசிபியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், அங்கீகாரம் புதுப்பித்தலை ஆன்லைனில் கொண்டுவரவேண்டும். 2021 – 2022 ஆண்டிற்கான ஆர்டிஇ தொகையை உடனடியாக விடுக்க வேண்டும் உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட்டன. மாநில, மாவட்ட,,மண்டல நிர்வாகிகள் மற்றும் பள்ளி தாளாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் டாக்டர் கே.பிரபாகரன் நன்றி கூறினார்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!