தமிழகம்

தரமற்ற வெள்ளைப் பூண்டை விற்பனை செய்ததாக மொத்த வியாபாரியிடம் சில்லரை வியாபாரி முறையிட்டு வாக்குவாதம்.

98views
மொத்த வியாபாரி தரமான வெள்ளைப் பூண்டை மாற்றித் தர மறுத்ததால் சில்லற வியாபாரி வாங்கிச் சென்ற வெள்ளைப் பூண்டை ரோட்டில் கொட்டி போராட்டம்.  இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களை தாக்கி செல்போனை தட்டி விட்டு அராஜகத்தில் ஈடுபட்ட வெள்ளைப் பூண்டு மொத்த வியாபாரி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விலகிக்கப்படும் வெள்ளைப் பூண்டுகள் கொண்டுவரப்பட்டு இங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் வி எஸ் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரியா தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக வடுகபட்டி வெள்ளை பூட்டு சந்தையில் வெள்ளை பூண்டு வாங்கி திருப்பூர், கோவை, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக 60 ஆயிரம் ரூபாய்க்கு 2500 கிலோ வெள்ளைப் பூண்டை சென்றுள்ளனர்.
இந்நிலையில் வாங்கிய வெள்ளைப் பூண்டுகளை கோவை மாவட்டத்தின் கிராம பகுதியில் விற்பனை செய்ததாகவும் பூண்டுகளை வாங்கிய பொதுமக்கள் தரமற்ற பூண்டுகளை விற்பனை செய்வதாக கூறி பூண்டு விற்பனை செய்த சில்லற வியாபாரி சுரேஷ் மற்றும் அவரது மனைவியை தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்து விடுவேன் என்று கூறியதைத் தொடர்ந்து விற்பனை செய்த பூண்டை வாங்கிக் கொண்டு பணத்தை திரும்ப செலுத்தி விட்டு வெள்ளை பூண்டு வாங்கிய மொத்த வியாபாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பூண்டை மாற்றி தர மறுத்துள்ளனர்.
இந்நிலையில் கோவையில் இருந்து நேரடியாக ஏற்றிச் சென்ற வெள்ளைப் பூண்டு வாகனத்துடன் வந்து வெள்ளை பூண்டு மொத்த வியாபாரி அண்ணாமலை டிரேடர்ஸ் திலிப் என்பவரிடம் முறையிட்டபோது விற்பனை செய்த 2500 கிலோ வெள்ளைப் பூண்டை வாங்க மறுத்துள்ளார். இதனால் மொத்த வியாபாரிக்கும் சில்லற வியாபாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஆனது.  இதனைத் தொடர்ந்து சில்லறை வியாபாரி சுரேஷ் வாங்கிய வெள்ளைப் பூண்டு மூடைகளை அண்ணாமலை ட்ரேடர்ஸ் எதிரில் உள்ள சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் சென்றபோது சம்பவத்தை வீடியோ பதிவு செய்த போது மொத்த வியாபாரி மற்றும் அவரது ஊழியர்கள் செல்போனையும் தட்டி கீழே தள்ளிவிட்டு தாக்க தாக்குதல் நடத்தியதோடு நீங்கள் ரிப்போர்ட்டர் என்றால் என்ன வேணாலும் செய்வியா எவ்வளவு காசு வாங்கினேன் என்று தரக்குறைவாக பேசி எங்களை அவதூறாகவும் பேசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தரமற்ற கூடை விற்பனை செய்த மொத்த வியாபாரி அடியார்களை கொண்டு பத்திரிகையாளர்களை தாக்கிய சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!