பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் 33 வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடத்தை வென்று சுழல் கோப்பை மற்றும் பரிசு ரூபாய் 25.005 கைப்பற்றியது.
43
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் கோ. சீதையம்மாள் நினைவு சுழல் கோப்பை 33-வது ஆண்டு மாநில அளவிலான லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது.
முதல் இரண்டாவது இடத்திற்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை அணியினரும் பொள்ளாச்சி எஸ் டி சி அணியினரும் மோதியதில் தமிழ்நாடு காவல்துறை அணி (34 க்கு 32). (25. க்கு 16. ) (25 க்கு. 21 ) புள்ளிகள் பெற்று 3. 0 என்ற நேர் செட் கணக்கில் புள்ளிகள் பெற்றது.
இந்நிலையில் முதல் இடத்தை பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணிக்கு கோ. சீதையம்மாள் நினைவு சுழற் கோப்பை மற்றும் பி.டி. சிதம்பர சூரிய நாராயணன் நினைவு பரிசு ரூபாய் 25.005 ம். இதனைத் தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்த பொள்ளாச்சி எஸ் டி சி அணியினருக்கு எல் எஸ் மில் லிமிடெட் சுழற் கோப்பை மற்றும் ரூபாய் 20.005 பரிசு வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை பிடித்த . சென்னை வைஷ்ணவா கல்லூரி அணிக்கு ஆண்டியப்பன் மற்றும் குமரேசன் என்ற குணா அவர்களால் .பரிசு. ரூபாய் 15.005ம் வழங்கப்பட்டது.
நான்காம் இடத்தை பிடித்த சென் ஜோசப் அணியினரும் தனபால் செட்டியார் அண்ட் சன்ஸ் சார்பாக பரிசு ரூபாய் 10,000 வழங்கப்பட்ட ஐந்தாவது இடத்தைப் பிடித்த விளையாட்டு விடுதி மேம்பாட்டு ஆணையம் சென்னை அணிக்கு
ஜெயராமன் அவர்களால் பரிசு ரூபாய் 8OO1. பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இளம் விளையாட்டு வீரர்களுக்கான விருதை எஸ் டி சி பொள்ளாச்சி அணியை சேர்ந்த கபிலனுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து
தொடர் நாயகன் விருதை தமிழ்நாடு காவல்துறை அணியைச் சேர்ந்த பார்த்திபனுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.