தமிழகம்

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “வானவில் மன்றம்” திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

83views
மாணவ மாணவியர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறந்து விளங்குவதற்காக “வானவில் மன்றம்” என்ற திட்டத்தினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து, இத்திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த அப்பாட பிரிவுகளின் மிகச் சிறந்த கருத்தாளர்களைக் கொண்டு கற்பித்து, அதில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள்,கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!