தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி செலுத்தாததால் தனியார் மண்டபத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி

76views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 24 வார்டு பகுதிகளிலும் குடிநீர் வரி மற்றும் சொத்துவரி கட்டாத கடை மற்றும் தனியார் மண்டபங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி வந்த நிலையில் ஆனால் இதுவரை கட்டப்படாத குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி கட்டாத தனியார் மண்டபங்களுக்கு நேரில் சென்று அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றன இதன் ஒரு பகுதியாக கவனம் பட்டி ரோட்டில் இயங்கி வரும் தனியார் மண்டபமான திவ்யா மஹாலில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி செலுத்தாததால் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய் அறிவுறுத்தலின்படி குழாய் ஆய்வாளர் சுகுணா, வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று தனியார் மண்டபத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்துள்ளனர் இதே போல் சொத்து வரி கட்டாவிட்டால் தனியார் மண்டபமும் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!