வேலூர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை இடம்மாற்றம் செய்து, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணியாற்றிய சிவ சண்முகம் பதவி உயர்வு பெற்று பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய விநாயகர் மூர்த்தி வேலூர் மாவட்ட வட்ட வழங்கல் துறையில் பறக்கும் படை தாசில்தாரராக நியமிக்கப்பட்டுள்ளார் இங்கு பணியாற்றிய கோட்டீஸ்வரன் வேலூர் கலால் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் கலால் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய செல்வி வேலூர் கோயில்கள் நிலங்கள் பாதுகாப்பு தாசில்தாரராகவும் அங்கு பணியாற்றிய சுரேஷ்குமார் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரராகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர். வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக இருந்த சுமதி கே வி குப்பம் சமூக நலத்திட்ட தனி தாசில்தாரராகவும் வேலூர் முத்திரை கட்டண தனி தாசிலராக அங்கு பணியாற்றிய ரமேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலே அலுவலகத்தில் பணியாற்றிய சத்தியமூர்த்தி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரராகவும் இந்த பணியில் இருந்த நரசிம்மன் வேலூர் ஆர்டிஓ அலுவலக நேர்முக உதவி ஆளராகவும் இடம் மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளார்.
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.