தமிழகம்

ராஜபாளையம் அருகே ஒரே வாகனத்திற்கு இரு முறை ஆன்லைன் அபராதம் விதித்ததை கண்டித்து காவல் சோதனை சாவடியை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

80views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த டெம்போ ஓட்டுனர் வினோத்குமார், அருகே உள்ள சோலை சேரி கிராமத்திற்கு டெம்போவில் தகடு பாரம் ஏற்றி சென்றுள்ளார்.
செல்லும் போது பாரத்தை இறக்கி வைப்பதற்காக இரண்டு உதவியாளர்களை உடன் அழைத்து சென்றுள்ளார். பாரம் ஏற்றி செல்லும் இடத்தில் ஆட்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக வேலாயுதபுரம் காவல் சோதனை சாவடியில் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பாரத்தை இறக்கி விட்டு ஊர் திரும்பி உள்ளார். ஊருக்கு வந்து பார்த்த போது அதே குற்றத்திற்காக ஆன்லைன் வாயிலாக ரூ. 1500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சக ஓட்டுனர்களிடம் அவர் தெரிவித்ததை அடுத்து, சுற்று வட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் ஒன்று திரண்டு காவல் சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.
ஆனால் காவல் துறை அதிகாரிகள் இதற்கு முறையான பதிலளிக்காமல், தங்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டி 50 க்கும் மேற்பட்டோர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த கரிவலம் வந்த நல்லூர் ஆய்வாளர் ஹேமலதா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கவனக்குறைவு காரணமாக நடந்திருக்கலாம் எனவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறி ஓட்டுனர்களை காவல் துறையினர் சமரசம் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!