தமிழகம்

தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

47views
தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் 18 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. மாநில தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மகாதேவன், மாநில துணை தலைவர் சந்திரன், மாநில துணை பொது செயலாளர் சௌந்தர்யா, மாநில பொருளாளர் இந்திராணி, திருச்சி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் மாநில பொது செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
தமிழ்நாடு முழுவதும் நல வாரிய அலுவலகத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நல வாரியத்தில் வழங்கப்படும் பண உதவிகளை இரண்டு மாதத்திற்குள் பட்டுவாடா செய்ய வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து வீடு கட்டி தர வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகப்படியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!