தமிழகம்

தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சித்தலைவர் பொறுப்பேற்பு

98views
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ரவிச்சந்திரன் இ.ஆ.ப இன்று காலை பதவியேற்றார். முன்னதாக தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ப. ஆகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு தொழிலாளர் நலத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் 5-வது மாவட்ட ஆட்சித் தலைவராக ரவிச்சந்திரன் இ.ஆ.ப பிப்.6 திங்கட்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் விவசாயம் மேம்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தகுதியான நபர்களை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்கள் மீட்கப்படும். குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். நீர்நிலைகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!