Uncategorizedதமிழகம்

மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய கோரிக்கை மனு; தென்காசி கலெக்டர் உடனடி நடவடிக்கை

785views
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய கோரிக்கை மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட நாயக்கர்பட்டி நாலாந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளி மாணவரான இவர், தனது பெற்றோர்களுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு அரசின் சார்பில் உதவி புரிய வேண்டும் எனக் கூறி மனு ஒன்றை அளித்தார். மாணவரின் மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயபிரகாஷை மாணவருக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதை அடுத்து மாணவர் மனோஜ் குமாருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மதிப்பு உடைய சக்கர நாற்காலியை நலத்திட்ட உதவியாக உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் உடனடியாக ஆட்சியர் கூட்டரங்கில் வைத்து சக்கர நாற்காலியை வழங்கினார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் கிடைப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மாணவரிடம் தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!