இந்தியா

திருமலை – திருப்பதி அன்னதானம் காட்பாடி கல்புதூரில் ஒரு மாதம் துவக்கம் !!

17views
வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் ஸ்ரீ திருமலை – திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 10 – ஆண்டுகளாக திருப்பதி செல்லும் நடைபாதை அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 10-ம் ஆண்டு அன்னதானம் வழங்கும் புரட்டாசி மாதம் கல்புதூர் ஜெயபாலாஜி மண்டபத்தில் துவங்கியது. தொடர்ந்து புரட்டாசி மாதம் முழுவதும் நடைபெறும்.
யாத்திரை பக்தர்களுக்கு தங்கும் இடம், குளியல் அறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை காட்பாடி கல்புதூர் ஸ்ரீ திருமலை – திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!