தமிழகம்

மதுரையில் சைக்கிளில் வந்து கோவில் விளக்கை திருடி செல்லும் மர்ம நபர் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு – பரபரப்பு

106views
மதுரையில் தினமும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் வரு கின்றன. அவற்றை தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக அனைத்து வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், தெருக்களின் சந்திப்புகளில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பை பாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல டயர் நிறுவனம் ஒன்று உள்ள விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த அனையா விளக்கு ஒன்று காணமல் போனது பார்த்து திடுக்கிட்டனர் வணிக வளாக நிர்வாகினர்.
உடனே அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது நள்ளிரவு ஒரு மணி 40 மணி நிமிடத்தில் சைக்கிளில் வந்த ஒரு நபர் கோவிலினுள் கையை விட்டு விளக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் விளக்கை திருடி செல்லும் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!