தமிழகம்

விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வர் கோயிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு சிம்மகுளத்தில் பெண்கள் வரம் வேண்டி நீராடல்

81views
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் மிக பழமையான மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  இங்கு கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (கடை ஞாயிறு) விழா மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கோயிலில் உள்ள சிம்மகுளத்தில் பெண்கள் நீராடினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு பெண்கள் சிம்மகுளத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டனர். ஞாயிறு பகல் முழுவதும் திரான பக்தர்கள் வந்து மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்கபந்தீஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!