தமிழகம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

48views
மதுரை கே.புதூர் பகுதியில் ,உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி உண்ணா விரதம் இருக்க முயன்றனர்.  இதற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால், பின்னர்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை விரைவில் நிரந்தர படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.  மேலும், தினக்கூலி ரூ 380 வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் , திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கொடைக்கானல், திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!