archiveசெய்திகள்

தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் 40 சவரன் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையில் ஈடுப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 7 பேர் கைது!!

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தை சேர்ந்தவர் ராஜா, இவர் இதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகின்றார். கடந்த 20-ம் தேதி மகளின் திருமணத்திற்காக துணி எடுக்க சென்னை சென்று அன்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட 40 சவரன் தங்க நகை, 500கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில் காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது....
உலகம்

அபுதாபியில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 22-03-2025, சனிக்கிழமை மாலை அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கிரேண்ட் நல்லாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதியில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டனர்....
தமிழகம்

வணிகவியல் நாள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக 20.03.2025 அன்று வணிகவியல் நாள் கொண்டாடப்பட்டது. துறைத்தலைவர் நைனா முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் நசீர் கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி, மேனாள் உதவி ஆட்சியர், மணிவேலன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பழைய மாணவர்கள் காமாட்சி மைந்தன் இராமமூர்த்தி, முருகானந்தம், இராஜேந்திரன்,...
தமிழகம்

ஆளுநரை சந்தித்த பிறகு நடிகர் பார்த்திபன் வெளியிட்டிருக்கும் அறிக்கை

நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.  உ வே சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக “தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்” என்று துவங்கி “தமிழக ஆளுனருக்கு மரியாதை” எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும்...
தமிழகம்

வாணியம்பாடி அருகே அரசு பேரூந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் !!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் சென்றபோது கொத்தகோட்டை பேரூந்து நிலையத்தில், பேரூந்தைநிறுத்தாமல் +2 பொதுதேர்வு எழுத கூடிய மாணவி பேரூந்தின் பின்னால் ஓடிச்சென்று பேரூந்தில் ஏறிய அவலம், கொத்தகோட்டை பேரூந்து நிலையத்தில் மாணவி நின்று இருந்தபோதும் பேரூந்தை நிறுத்தவில்லை. இதன் வீடியோ வைரல் ஆன நிலையில் பேரூந்தின் ஓட்டுநர் முனிராஜை, நடத்துநர் அசோக் போக்குவரத்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

முதல்வரிடம் நீர்வளத்துறை அமைச்சர் வாழ்த்து

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை 2025-26-ம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துபெற்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பெண்களை இழிவாக பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடைப்பம் முறத்துடன் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம்பகுதியை சேர்ந்த குமரன் திமுக பிரமுகர். இவன் பொதுவாக வளைதளத்தில் எதிர்கட்சியினரை கேவலமாக பேசுபவன். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பெண்களை கேவலமாக பேசி வலைதளத்தில் வெளியிட்டு உள்ளான். இதனை கண்டித்து பாஜகவேலூர் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் மஞ்சு, நகர தலைவி ரேகா, செயலாளர் ஸ்ரீதேவி, மாவட்ட துணைத்தலைவி ப்ரியா,செயலாளர் கவிதா, செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி துடைப்பம், முறத்துடன் குமரன் வீட்டு முன்...
தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோட்டக்குப்பத்தில் நடைப்பெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இன்று (23.03.2025), விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கோட்டக்குப்பம் நகர நிர்வாகி திரு.A.முகமது கௌஸ் அவர்களின் ஏற்பாட்டில், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பம் நகரம் மனோன்மணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்கள் மற்றும் கழக சகோதரர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்து இஃப்தார் விருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் கிழக்கு மாவட்டக் கழகச்...
தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை ஆந்திர எல்லையில் கஞ்சா கடத்திய ஆசாமி கைது

வேலூர் அடுத்த காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை ஆந்திர எல்லை அருகே உள்ள சோதனை சாவடியில் ஓடிஸாவிலிருந்து சேலத்திற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 5 - கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு காவல்துறை ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த சுதம் ரைட்டா (49) என்ற ஆசாமியை கைது செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் தமிழ் வருட பஞ்சாங்க வெளியீட்டு விழா

வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் விசுவாவசுவருட தமிழ் பஞ்சாங்க வெளியீட்டு விழா சத்துவாச்சாரியில் நடந்தது. சங்க வேலூர் கிளை தலைவர் க.ராஜா தலைமை தாங்கினர்.மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் வெளியிட ராஜா பெற்றுக்கொண்டார். சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுகந்தி.லலிதா, நிர்மலா, வெங்கட்ரமணி, கிருஷ்ணமூர்த்தி. கணபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 4 461
Page 2 of 461

Right Click & View Source is disabled.

error: Content is protected !!