archiveஇலக்கியம்

இலக்கியம்சிறுகதை

டாய்புண்

அந்தி சாய்ந்த நேரம். கதிரவன் படுக்கைக்கு செல்ல சந்திரன் காவலுக்கு பொறுப்பேற்றான். மூன்று வயதான செல்ல பிள்ளை பிபுவோடு அப்பா ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார். பிபுவுக்கு எல்லா குழந்தைகளை போல பல நிறங்களான பந்துகளோடு விளையாடுவது மிகவும் அதிகமாக பிடிக்கும் ஒன்று. அப்பா மஞ்சள் நிற பந்தை எடுத்து பிபுவிடம் உருட்டி விடுவார். பிபு பிடித்த அந்த பந்தை மீண்டும் அப்பாவை நோக்கி உருட்டி அல்லது தூக்கி எறிவான். ஒருமுறை...
இலக்கியம்சிறுகதை

புதுசா ஒரு பிறந்த நாள்…

கார் பொறுமையாக சென்று கொண்டிருந்தது . காரை ஓட்டிக் கொண்டிருந்த முருகேசன் திரும்பி மனைவியை பார்த்தார் ..அவளது முகத்தில் ஏகப்பட்ட சலணம். வழக்கத்திற்கு மாறாக வாய்மூடி வரும் கௌசல்யாவின் மௌனம் அவர் அவரை கலவரப்படுத்த “என்ன கௌசல்யா !என்ன ஆச்சு ?உடம்பு சரியில்லையா ?” அவரது கேள்வியில் சற்று நிதானப்பட்டவள்,  “இன்று கோர்ட்ல ஒரு கேசுங்க... ரெண்டு பேரும்  காதல் திருமணம் செய்து இரண்டு வருஷம் ஆகுது .அதுக்குள்ள டைவர்ஸ்...
இலக்கியம்சிறுகதை

காக்கை குருவி எங்கள் ஜாதி…

விடியல் காலை ஐந்து மணி.. ஏர்க்கலப்பையை தோளில் சுமந்தபடி கிளம்பினார் சின்னையா. பெரிய லோட்டா நிறைய நீராகாரத்தை நீட்டி இதைக் குடிச்சிட்டு கிளம்புங்க.. நெற்றியில் திருநீறு பூசியபடி வந்தவர் திண்ணையில் அமர்ந்து நீராகாரத்தை பருகியவர் பன்னண்டு மணிக்கு சாப்பாடு எடுத்து வந்துடு புள்ள.. இப்பல்லாம் பசி தாங்க முடியல.வெளவெளன்னு வருது. சரிங்க மாமா.. பத்து மணிக்கு அந்த வேலுப்பயலை கொஞ்சம் அனுப்பி வைங்க.. நான் கேப்பைக்கஞ்சி கொடுத்து அனுப்பறேன்.அலுப்பு பாக்காம...
இலக்கியம்சிறுகதை

உப்புக்கண்டம்

அன்றைக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவின் மூன்றாம் நாள் விடையாத்தி நிகழ்ச்சி! ஒவ்வொரு குடும்ப வகையறாவும் ஓர் ஆடு பிடித்து அறுத்து அதன் இறைச்சியைக் கூறு போட்டுப் பிரித்துக் கொண்டார்கள். அப்பொழுதெல்லாம் கள் குடிக்கும் வழக்கம் உண்டு. சாராயமும் கூட. கோவில் திருவிழா என்றால் வீட்டின் முன் மாவிலை, தென்னங்குருத்தில் செய்த தோரணம், குலை ஈன்று இருக்கும் வாழைமரம்,ஈச்சங்குலை ஆகியன வாயிலின் இருபுறமும் கட்டித்தொங்கவிட்டிருப்பர். சீரியல் மின்விளக்கும் ஒளிரும்.அதைப்பார்த்தாலே திருவிழா களைகட்டி...
இலக்கியம்கவிதை

லதா கவிதைகள்

தையலை உயர்வு செய் பெண்மை போற்றும் பாரதமே பேரின்ப பொருளாய் காணாதே தாய்மை ஒன்றே உலகினில் தலைமை என்று மறவாதே... குடும்பம் ஒன்றே கடவுளாய் குடிலைச் சுற்றித் தவமிருப்பாள் குயிலுக்கும் குரல் கொடுப்பாள் கூகைக்கும் பதில் சொல்வாள்... ஆணுயர தலைகுனிந்து ஆதாரமின்றி அடையாளமானவள் ஆசையின்றி சிகரம் தொட்ட மீசையில்லாப் பாரதியவள்... நிகரென்று யாருமில்லை சமமென்று வாழும் பெண்மணிகள் சிகரமென்று உயர்த்திப் போற்றிடுவோம் வரமென்று வாழ்த்தி வணங்கிடுவோம்... பெண் பெண்ணுக்கும் மீசையுண்டு...
கவிதை

லதா கவிதைகள்

ஆண் சுவாசம் உலகத்தின் முதல் மனிதனே குற்றத்தின் முதல் தண்டனையனே பரிகாரமில்லா முதல் பாவமோ பரிகாசம் தேடாத முதல் யாசகனோ விழியால் நேர்ந்த முதல் உயிர்ப்பில் விழிமூடுவரை கொடுக்கும் முதல் தர்மன் காதல் விளைவின் முதல் கண்ணீர் காற்றோடு பேசாத முதல் சுவாசகன் கலையா ஓவியனின் முதல் கற்பனை காவிய உலகம் இவன் படைப்பன்றோ..‌‌ ஆண் பூ எதிர்மறை வாசமோ எதிரியில்லா சுவாசமோ ஏகாந்த மகரந்தமோ இவன்... எவர் நிலையறிய...
கட்டுரை

சீரிய சிந்தனை

மகா கவியின் கவிதைகள் அனைத்துமே சீரிய சிந்தனைகள் மூலம் வெளிப்பட்டவை. வாழ்நாளில் வறுமை தவிர எதையுமே கண்டறியாதவர். எத்தகைய வறுமையில் உழன்றலும் அவரது கவியுள்ளம் உறங்க வில்லை . சுப்பையா என்கிற அவருக்கு பாரதி என்கிற பெயரை  1893இல் சூட்டினார் எட்டயபுரம் மன்னர். அப்போது அவருக்கு வயது பதினொன்று மட்டுமே. வெள்ளையர்கள் அரசு, கத்தி முனைக்குக் கூட அஞ்சவில்லை. பிரதியின் கூர்மையான பேனா முனைக்கு அஞ்சியது. அவரைக் கைது செய்து...
கவிதை

ருத்ர தாண்டவம்

பிரம்மா படைப்புக் கடவுள் மகா விஷ்ணு காக்கும் கடவுள் சிவன் முக்தி கொடுக்கும் கடவுள் தர்மங்கள் சிதையும்போது அவதாரம் எடுப்பேன் என்றான் கண்ணன் கீதையில்! கலியுகத்தில் தர்மம் இல்லை! பாவங்கள் நிரம்பிப் பெருக்கெடுக்கின்றன பொய்,வஞ்சகம்,சூது , திருட்டு என்று எதிலும் குறைவில்லை! தலைவிரித்தாடுகிறது அதர்மம்! கடவுள் நம்பிக்கையும் காலாவதியாகும் இந்தக் காலத்தில்---- கொரானா வடிவில் ஒரு அவதாரம்! இதன் வடிவைக் காணும்போது ருத்திராக்ஷம் நினைவு நிழலாடுகிறது! சிவபெருமானின் ஆபரணம்! இந்த...
கவிதை

உள்ளங்களே உழவனின் அகம்

புத்தரிசி பொங்கலில் வெண்மையாய் பொங்குது வாழ்வு பொங்கல் உள்ளங்களே உழவனின் அகம் சுவைக்க சொல்லுங்கள் பொங்கலோ பொங்கல் புலர்ந்த சூரிய கதிர்களில் பொங்கி ஒளிர்கிறது பொங்கல் திருநாள் வெளிச்சம் காலத்தின் தோரணையில் மஞ்சள் நிறம் படர்ந்து இயற்கையின் உதட்டில் பூசணிப்பூ பதித்து வாழ்வெங்கும் வருகிறது தைத்திருநாள் புன்னகை கரும்பின் இனிப்பில் பொங்கி வழிகிறது மங்காத நல்வாழ்வின் தைச்சுவை தை உழவர் திருநாள் தமிழர் பெருநாள் தை துன்பத்தை நறுக்கி மகிழ்வை...
கட்டுரை

காவல் சுவடுகள் – நூல் விமர்சனம்

இருளைச் சுற்றியிருக்கும் பெரு வெளிச்சம் : காவல் துறை. அவரவர்களுக்கான துயரங்களை அவரவர்களே எழுதித் தீர்க்க வேண்டும். அதிலும் காவல் துறை சார்ந்த துயரங்களை ஒரு காவல் துறைப் பணியாளரே கவிதையில் எழுதுவதென்பது இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இப்போது அதனை மா.ஆனந்தன் (வசந்தன் )சாத்தியமாக்க முயற்சித்துள்ளார். அது பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு மாதாந்திர நாள்காட்டியின் சிவப்பு நிற விடுமுறை நாட்களை நம் குடும்பத்தினர் பார்ப்பதற்கும் ஒரு காவல் துறை...
1 2 3 4 15
Page 2 of 15

Right Click & View Source is disabled.

error: Content is protected !!