archiveஇலக்கியம்

தமிழகம்

திரு.ரவி நவீனன் எழுதிய அஞர் – சிறுகதை தொகுப்பு வெளியீட்டுவிழா

ரவி நவீனன் அவர்களின் அஞர் நூல் வெளியீட்டு விழா நேற்று அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பற்பல பிரமுகர்கள் பிரபல எழுத்தாளர்கள் வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர். நண்பர் உரத்த சிந்தனை உதயம் ராம் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பாலசலடில்யன் நிரலுரை செய்தார். நல்ல மெதுவடை காபிக்குப் பின்னர் சரியாக 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நூலினை திரு தயாளன் வெங்கடாசலம் வெளியிட பேனாக்கள் பேரவையின்...
கட்டுரை

நூல் அறிமுகம் : நகரத்தார் பெண் சாதனையாளர்கள்

பதிவு: சித்தார்த்தன் சுந்தரம் சமீபத்தில் வாசித்த `இப்படியும் சாதிக்கலாம்: நகரத்தார் பெண் தொழிலதிபர்களின் பேட்டிகள்” மூலம் நகரத்தார் சமூகப் பெண்களில் வெற்றிக் கொடி நாட்டிய 17 ஆச்சிமார்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இது போல இந்த சிறிய சமூகத்தைத் சேர்ந்த பல பேர் உலகெங்கும் வியாபித்து இருக்கலாம். அதையும் இந்நூலாசிரியர் தேனம்மை லெட்சுமணன் ஆவணப்படுத்த வேண்டும். `விடாமுயற்சியே வெற்றி தரும்’ எனச் சொல்லும் மணிமேகலை சரவணனிலிருந்து `பேருந்தில்...
இலக்கியம்

‘தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது’ பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை

நாகர்கோவில் : நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின் 16-ஆம் ஆண்டு விழா, கவிஞர் மீராவின் 86-ஆவது பிறந்த நாள் விழா, நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா அக்டோபர் 10 வியாழனன்று கல்லூரியின் இலக்குமி சிற்றரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமாபாரதி தலைமையேற்றார். ஹோலிகிராஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.ஆன்சி...
இலக்கியம்

தொடர் இலக்கியச் செயல்பாடுகளுக்காக கவிஞர் மு.முருகேஷூக்கு ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.

சென்னை. தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து பங்களிப்பு ஆற்றிவரும் கவிஞர் மு.முருகேஷூக்கு சென்னையில் கடந்த செப்.23 அன்று நடைபெற்ற விழாவில் ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டினையொட்டி ‘கவிதை உறவு' மாத இதழும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து சென்னை ராணி சீதை மன்றத்தில் நடத்திய விழாவில், தமிழ் இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்த 100 படைப்பாளர்களுக்கு கலைஞர் விருதினை வழங்கி கவுரவித்தது. விழாவிற்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர்...
அறிவிப்பு

கவிஞர் மித்ரா நினைவு ஹைக்கூ கவிதைப்போட்டி – 2024

’இனிய உதயம்’ இதழ் - கவிஞர் கவிநிலா மோகன் இணைந்து நடத்தும் கவிஞர் மித்ரா நினைவு ஹைக்கூ கவிதைப்போட்டி - 2024 மொத்தப் பரிசு ரூ.15 ஆயிரம் கவிநிலா மோகன் ஜப்பானில் பிறந்து, உலகெங்கும் பரவி, இன்றைக்கு தமிழ் நிலத்தில் செழித்து வளர்ந்து நிற்கும் மூவரி குறுங்கவிதை ஹைக்கூ. மகாகவி பாரதி தமிழில் அறிமுகம் செய்து ஒரு நூற்றாண்டு (1916-2016) கடந்தோடிவிட்டது. கவிக்கோ அப்துல்ரகுமான் தமிழின் நேரடியான முதல் ஹைக்கூ...
கட்டுரை

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூல் ‘ஓயும் ஓடம்’

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூலின் பெயர் 'ஓயும் ஓடம்' இவரது நூல், திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தையும், திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஐந்தே நாட்களில் கவிதையாக எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அந்த 133 ஒவ்வொரு அதிகாரத்துக்குள்ளும் பத்து குறள்கள் இருக்கின்றன. அப்படியான ஒவ்வொரு குறள்களிலும் மொத்தமாக என்ன சொல்லி உள்ளார் என்பதை அந்த அதிகாரம் முழுதும் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதையும் ஒரே கவிதையில்...
இலக்கியம்

திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன்...
இலக்கியம்

“பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது” நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு

உத்திரமேரூர் : காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியரும் கவிஞருமான பெ.விஜயலட்சுமி எழுதிய ‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் மு.முருகேஷ், “பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது” என்று தெரிவித்தார். இவ்விழாவில், வட்டாரக் கல்வி அலுவலர் (3) தெ.ரூபி ஞானதீபம் நூலை வெளியிட, பன்னாட்டு சுழற்சங்கத்தைச் சேர்ந்த க.பெருமாள் பெற்றுக்கொண்டார். விழாவில், கவிஞர் சா.கா.பாரதி ராஜா, பன்னாட்டுச்...
கவிதை

துபாயில் இருக்கிறேன்

எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா - வைரமுத்து...
கவிதை

மாதர் போற்றுவோம்

அவள் அஹிம்சையின் ஒரு பெயர் அக்கினிக்கு மறுபெயர் பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்... வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள் தான் நல்ல நம்பிக்கை ... நமக்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ நம்மை இயக்கும் ஒரு பெருங்கை... அவள் எடுக்கும் அவதாரங்கள் அநேகம்... அத்தனையும் காட்டுவது பாசம் மிக்க குடும்பத்தின் சினேகம்.... ஒரு முகம் காட்டும் பன்முகம் ... விளக்குத் திரி போல் அனைவருக்கும் நன்முகம்... தனக்கு மட்டுமின்றி கணவனுக்கும் குடும்பத்துக்கும்...
1 2 3 16
Page 1 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!