மதுரை அவனியாபுரம் வழியாக முத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தற்கொலை.
76
மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் பெருமாள் வயது 27 இவருக்கு திருமணம் ஆகி குரு தேவி என்ற மனைவியும் பிறந்து 8 மாதங்களை ஆன ஆண் குழந்தையும் உள்ளது. பெரியார் நகர் பகுதியில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனதால் மனைவி மற்றும் குழந்தையுடன் பெரியார் நகரில் தற்போது வசித்து வருகிறார்.
வெள்ளக்கல் பகுதியில் உள்ள பெருமாளின் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததால்., பெருமாள் மனைவியின் குடும்பத்தார் வசிக்கும் பெரியார் நகரில் குடித்தனம் நடத்தி வரும் நிலையில் மனைவியின் குடும்பத்தினரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை நிலவிவந்தது. இதனால்., யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இன்று அவனியாபுரம் வழியாக முத்துப்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பெருமாள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கிணற்றுப் பகுதியில் சென்று பார்த்தபோது இறந்த நிலையில் உடல் மிதந்து கொண்டிருந்தது. உடனடியாக அவனியாபுரம் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையில் இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு நிலைய அலுவல சேகர் தலை மேலான விரைந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு வீரர்கள் பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெருமாள் தற்கொலை குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: வி காளமேகம் மதுரை மாவட்டம்