தமிழகம்

காட்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள்

148views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்நிலையம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் பாரதி (55) என்பதும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் துரைமகாலிங்கத்தின் மகள் என்பதும், இவர் காட்பாடி காந்திநகரில் தனது கணவர் குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுடும்ப பிரச்னையா? அல்லது வேறு காரணமா? என்பதை ரயில்வே காவல்துறை விசாரணை செய்துவருகிறது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!