தமிழகம்

உசிலம்பட்டி அருகே தமிழக அளவில் நடைபெற்ற் நீச்சல் போட்டியில் தங்கம் உள்பட பதக்கங்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது

131views
தமிழக அளவில் தமிழ்நாடு அக்வாடிக் அசோசியன் சார்பில்; மதுரையில் ரோஸ் கோர்ஸ் மைதானத்தில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள் பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கம் நான்கு வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள் மலர்வழி சத்யா, மற்றொரு பிரிவு நீச்சல் போட்டியில் திவ்யா ஜெயந்தி மலர்விழி நித்யா ஆகியோர் வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.  இவர்களை பாராட்டும் விதத்தில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி அவர்களின் நினைவாக பள்ளி வளாகத்திலேயே நட்டு வைக்கப்பட்டது. இந்நிகழச்சியை உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை ஆசிரியர் சரவணகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவிகளின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளியில் நடப்பட்டு இருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!