தமிழகம்

எஸ்.ஆர்.எம் வேளாண்மை அறிவியல் கல்லூரி தோட்டக்கலை மாணவிகள் “கிராமத்தில் தங்கி பயிலுதல் திட்டம்

70views
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பாபுராயன் பேட்டை ஊராட்சியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு தோட்டக்கலை பயிலும் மாணவிகள் ஜெயலஷ்மி, வனிதா, சீதா, ஸ்ரீநிவேதா, நிபாசிகா, கீர்த்தனா, சுவேதா.வே, கவிபுவனா, சுவேதா.ந. ஆகியோர் கிராமத்தில் தங்கிப் பயலுதல் திட்டத்தின் கீழ் சித்தாமூர் வட்டாரத்தில் முகாம் இட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக சித்தாமூர் வட்டத்திற்கு உட்பட்ட அரசூர் என்ற கிராமத்தில் ” ஜீரோ ஆற்றல் குளிர் அறை” தொழில்நுட்பம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை நீண்ட நாட்களுக்கு எளிய முறையில் சேமித்து வைப்பதற்கான மாதிரியை செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!