Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே வயல் வெளியில் நெல் நாற்றுக்குள் படுத்துக்கிடந்த 4அடி நீளமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

91views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் கருப்பையா.விவசாயியான இவர் தனது தோட்டத்திலுள்ள வயல் வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.அப்பொழுது வயல் வெளியில் நெல் நாற்றுக்குள் பாம்பு ஒன்று படுத்துக்கிடப்பதை கண்டு அருகிலிருந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.அங்கிருந்த இளைஞர்கள் தோட்டத்தில் படுத்துக்கிடந்த 4அடி நீளமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பை லாவகமாகப் பிடித்து பாம்புகளை பிடிக்கும் சிவாலளயம் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பிரேமிடம் ஒப்படைத்தனர்.அவர் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரி சூர்யா அதனை பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதிக்குள் விட்டார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!