தமிழகம்

பாம்பு கடித்து இறந்த பையனின் வீட்டிற்கு SDPIகட்சியின் மாநில பொதுச்செயலாளர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்

41views
கரூர் மாவட்டம் பள்ளப்ட்டியில் சமீபத்தில் பாம்பு கடித்து,சிகிச்சை பலனின்றி இறந்த பதினாறு வயது உடைய முகம்மது ஹக்கீம் ஆதிலின் இல்லத்திற்கு எஸ் டி பி ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அசா.உமர் பாரூக், திருச்சி மண்டலத் தலைவர் இமாம் ஹஸ்ஸான் பைஜி மற்றும் பள்ளப்பட்டி நகர நிர்வாகிகளும் நேற்று (3.2.23) நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.
அப்போது அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் என் பையனுக்கு நடந்தது போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்றும்,
மருத்துவமனையில் போதிய மருந்தும் மருத்துவர்களும் எப்போதும் இருக்க வேண்டும் என்று தங்களுடைய கவலையை பதிவு செய்தார்கள்.
அப்போது குடும்பத்தில் உள்ள நபருக்கு அரசு வேலை கிடைப்பது சம்பந்தமாக எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இதை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் வலியுறித்தியுள்ளோம் என மாநில பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக் அக்குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!