தமிழகம்

உசிலம்பட்டியில் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கலை இலக்கிய விழா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் என முப்பெரும் விழா நடைபெற்றது

248views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் திருக்குறள் ஒப்பி வித்தல், கலை இலக்கிய விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளி குழந்தைகள் பல்வேறு மாறுவேட போட்டிகள், திருக்குறள் ஒப்பி வித்தல், நடனம், பரதநாட்டியம், பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்எல்ஏ ஐயப்பன், மற்றும் நகர மன்ற தலைவர் சகுந்தலா, வட்டார கல்வி அலுவலர் திலகவதி, 18 ஆவது வார்டு கவுன்சிலர் பிரகதீஸ்வரன், ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.
இந்த ஏற்பாட்டை நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன்பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.  இந்நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட ஓட்டுனர் அணி பிரிவு பிரபு, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், உசிலம்பட்டி நகர பொறுப்பாளர் கார்த்திகை சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவன், மற்றும் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!