தமிழகம்

கடையநல்லூரில் நர்சரி பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா: முன்னாள் எம்எல்ஏ பரிசுகள் வழங்கி பாராட்டு

215views
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ முஹம்மது அபுபக்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மழலை செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். கடையநல்லூர் பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, பெஸ்ட் நர்சரி பிரைமரி பள்ளி, பெஸ்ட் கிட்ஸ் ப்ளே ஸ்கூல், கே.ஜி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பெஸ்ட் கல்வி குழுமத்தின் சேர்மன் முகம்மது மைதீன் தலைமை வகித்தார். செயலர் முகம்மது காசிம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முஹம்மது அபூபக்கர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். மேலும் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் வேலம்மாள், பெஸ்ட் பள்ளியின் முன்னாள் முதல்வர் ரெஜினா மேரி, டாக்டர் ஜவாஹிரா சலீம் ஆகியோர் கலந்து கொண்டு கே.ஜி குழந்தைகளுக்கு பட்டமளித்து கௌரவித்தனர். விழாவில் பள்ளியின் தாளாளர் முஹம்மது யூசுப் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் இக்பால், முதல்வர் ராஜேஸ்வரி, துணை முதல்வர் ரதி, பெஸ்ட் நர்சரி பிரைமரி பள்ளியின் முதல்வர் அனுசியா, பெஸ்ட் கிட்ஸ் பிளே ஸ்கூல் முதல்வர் அனிஷா மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!