தமிழகம்

ராமநாதபுரம், மண்டபம் வட்டார சமுதாய வளைகாப்பு விழா

52views
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தல் படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா  ராமநாதபுரம் ஜனார்தன் மகாலில் நடந்தது. ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: , எளிய பெண்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேறு கால விடுப்பு 12 மாதம் அறிவித்துள்ளார் என்றார்.  மண்டபம் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழாவை மண்டபம் பேரூராட்சி தலைவர் டி.ராஜா தொடங்கி வைத்தார். கவுன்சிலர் ஜெயந்தி ராஜா முன்னிலை வகித்தார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி வரவேற்றார். ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி, அழகன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் 250 பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. பங்கேற்றோருக்கு  தாம்பூல பொருட்கள்,  5 வகை சாதம் வழங்கப்பட்டது. நிலை 1 வட்டார மேற்பார்வையாளர் முத்தம்மாள்,  நிலை 2 வட்டார மேற்பார்வையாளர் முத்துமாரி, அங்கன்வாடி மைய பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!